பழங்கால தங்க பொருட்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு


பழங்கால தங்க பொருட்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு
x

காளையார்கோவில் அருகே கண்டெடுக்கப்பட்ட தங்க பொருட்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டது.

சிவகங்கை

சிவகங்கை,

காளையார்கோவில் அருகே கண்டெடுக்கப்பட்ட தங்க பொருட்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டது.

தங்க குழாய்

சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் அருகே கொல் லங்குடி ஊராட்சி பகுதியில் தொழில் நடை குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது முதுமக்கள் தாழி ஓடுகளுக்கு இடையே தங்கத்தாலான பொருட்கள் கிடைத்தன.

இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது:-

கொல்லங்குடி ஊராட்சி, சுந்தனேந்தல் , உசிலனேந்தல் கண்மாய் பகுதியில் நேற்று முன்தினம் சிவகங்கை தொல் நடைக்குழு உறுப்பினர் சரவணன் மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே தங்கம் போன்ற பொருள் 2 கிடைத்தன. அங்கு விரிவான ஆய்வு மேற்கொண்டதில் தாலி போன்ற கயிற்று சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி என அழைக்கப் பெறும் அணிகலனாக இருக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்தது.

தாலிச்சரடில் உள்நுழைத்து கோர்த்து அணியப்பெறும் தங்கத்தாலான பொருட்களில் நீண்டு குழாய் போல் இருப்பதை யானைக் குழாய் என்றும், குழாய் என்றும், அழைக்கின்றனர்.

வேலைப்பாடு

மேலும் நீட்சி இல்லாமல் சிறிய அளவில் உள்ளதை மணி என்றும், குண்டுமணி என்றும் அழைக்கின்றனர். தற்போது இங்கு கிடைத்தவை குழாய் போன்று நீண்டு இல்லாமலும் மணி போன்று சிறிய அளவினதாக இல்லாமலும் உள்ளது. மேலும் மத்தளத்தை போன்ற வடிவம் உடையதாக இருபக்கம் சிறியதாகவும் நடுப்பகுதி பெரியதாகவும் காணப்படுகிறது. இரு பக்கமுனைகளிலும் நடுப்பகுதியிலும் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

இதில் ஒன்று பார்வைக்கு நல்ல நிலையிலும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் உள்ளது.2-ம் ஒரே இடத்தில் கிடைத்ததாலும், ஒன்று சிதைவுற்று இருப்பதாலும் இது பழமையானதாக இருக்கலாம், முதுமக்கள் தாழிக்குள் இருந்து வெகு நாட்பட்டு ஓடுகளோடு வெளிப் பட்டிருக்கலாம். இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் வெறும் ஓடுகளாய் பரந்து பட்டு மேற்பரப்பில் காணப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்படைப்பு

கண்டெடுத்த 2 குண்டுமணிகள் குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பெற்றது. தொல்லியல் துறை ஆணையர் கூடுதல் பொறுப்பு சிவானந்தம் வழிகாட்டுதலின்படி நேற்று சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத்குமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேசு ஆகியோர் நேரில் இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தாலான பழமையான குழாய் போன்ற பொருட்கள் ஒப்படைக்கப ்பட்டன. அப்போது வருவாய்த்துறை உதவியாளர் சுரேசு மற்றும் சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் நரசிம்மன், பொருளாளர் பிரபாகரன், உறுப்பினர் சரவணன், செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், தொல்நடைக் குழுவை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story