மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து -  வாலிபர் உயிரிழப்பு
x

பட்டுக்கோட்டை அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையை அடுத்த சூரங்காட்டை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி.இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன் (வயது 23) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் சமீபத்தில் ஊருக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் ராஜேஷ் கண்ணன் பட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆலடிக்குமுளை திருமண மண்டபம் அருகே வந்தபோது புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜேஷ் கண்ணன் உயிரிழந்த செய்தி அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து அரசு பஸ் டிரைவரை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வருவாய் துறை அதிகாரிகள் மற்ரும் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியல் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

பட்டுக்கோட்டை போலீசார் கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story