திருவாரூர்-வடகரை இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்


திருவாரூர்-வடகரை இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்
x

திருவாரூர்-வடகரை இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்

நாகப்பட்டினம்

சிக்கல்

திருவாரூரில் இருந்து கீழ்வேளூர், கோகூர் வழியாக வடகரை வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்்க தொடக்க விழா வடகரை ஊராட்சியில் நடந்தது. விழாவுக்கு நாகை மாலி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துக்கழக நாகை மண்டல பொதுமேலாளர் மகேந்திரகுமார் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, தாட்கோ தலைவர் மதிவாணன், ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) சிதம்பரகுமார், கோட்ட மேலாளர் தமிழ்ச்செல்வம், கிளை மேலாளர் ஜெய்சங்கர், ஊராட்சி தலைவர்கள் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story