மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி


மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
x

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியானார்.

கரூர்

கரூர் அருகே உள்ள வாங்கல் ஈ.வே.ரா. தெருவை சேர்ந்தவர் ரெத்தினம் மனைவி தனம்மாள் (வயது 60). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனது ஆடைகளை துவைத்து காய வைத்துள்ளார். அப்போது காய வைக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தனம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story