விழுப்புரம் மாவட்டத்தில்புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை


விழுப்புரம் மாவட்டத்தில்புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்


இதுகுறித்து கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போகி பண்டிகை

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

காற்றின் தரத்தை பாதுகாக்க

எனவே போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாடி காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story