கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x

கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

குடும்ப தகராறு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள மணமேடு சிவானந்தா பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் குமாரசாமி(வயது 39). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி(25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மணிகண்டன்(8) என்ற மகன் இருக்கிறான்.

குமாரசாமிக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கடந்த 22-ந் தேதி உறவினர்கள் அழைத்து, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தூக்கில் தொங்கினர்

இந்நிலையில் நேற்று மணமேடு அருகே அலகரையில் இளங்கோவன் என்பவரின் தரிசு நிலத்தில் உள்ள புளியமரத்தில் குமாரசாமியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். இது குறித்து தொட்டியம் போலீஸ் நிலையத்தில் பரமேஸ்வரியின் தாய் புஷ்பா புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குமாரசாமி மற்றும் பரமேஸ்வரியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், 2 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணமேடு பகுதியில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story