பண்ருட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பண்ருட்டியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூர்
பண்ருட்டி, செப்.26-
பண்ருட்டி ராமசாமி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன்(வயது 42). இவருடைய மனைவி வசந்தி(36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர் மதுகுடித்து விட்டு வந்து வசந்தியை அடித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வசந்தி வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story