சுடு தண்ணீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த பெண் சாவு

சின்னமனூர் அருகே சுடு தண்ணீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்
சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுராஜ். அவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 57). கடந்த மாதம் 29-ந் தேதி இவர், குளிப்பதற்காக அடுப்பில் சுடு தண்ணீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது சுடு தண்ணீர் கொட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





