விருத்தாசலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


விருத்தாசலத்தில்  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

விருத்தாசலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அண்ணாநகர் பூங்குன்றனார் தெருவை சேர்ந்தவர் முத்து மகன் கோகுல் என்கிற லட்சுமி காந்தன் (27). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வீட்டில் இருந்து வந்தார். நேற்று இரவு லட்சுமி காந்தன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லட்சுமிகாந்தனை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து லட்சுமி காந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story