Normal
சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி
சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி நடந்தது.
கரூர்
கரூர்
கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் மைதானத்தில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை நாதஸ்வர உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார் குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்னர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு சென்றனர்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பாக அரங்குகளை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு சிறு தானிய, கம்பு, ராகி மற்றும் சோள முறுக்குகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் நாள்தோறும் ஒரு சிறுதானிய சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது. இதில் கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட தொகுப்பு மற்றும் அரசுத்துறை அரங்குகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story