பொக்லைன் வாகனம் விழுந்து உடல் நசுங்கி டிரைவர் இறந்த பரிதாபம்


பொக்லைன் வாகனம் விழுந்து உடல் நசுங்கி டிரைவர் இறந்த பரிதாபம்
x

வாணாபுரம் அருகே பொக்லைன் வாகனத்தை சரி செய்ய ஜாக்கி எந்திரத்தால் தூக்கியபோது வாகனம் தலையில் விழுந்து டிரைவர் பலியானார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்


வாணாபுரம் அருகே பொக்லைன் வாகனத்தை சரி செய்ய ஜாக்கி எந்திரத்தால் தூக்கியபோது வாகனம் தலையில் விழுந்து டிரைவர் பலியானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறை பட்டு சந்தை மேட்டு தெருவை சேர்ந்தவர் சந்தோணிபாய் (வயது 40). பொக்லைன் வாகன டிரைவர். இவரது ஊரின் அருகே திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதி உள்ளது. நேற்று அந்த பகுதியில் உள்ள சமத்துவபுரம் அருகே சாலையை சீரமைக்கும் பணியில் சந்தோணிபாய் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது பொக்லைன் வாகனம் பழுதானது.

இதனை சீரமைப்பதற்காக சந்தோணிபாய் 'ஜாக்கி' எந்திரத்தால் பொக்லைன் வாகனத்தை மேலே தூக்கும் முயற்சியில் ஈடுபட்டுக கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தலை மீது வாகனம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வாணாபுரம் போலீசார், சந்தோணிபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story