திருவள்ளூர் அருகே தொழிலாளிக்கு அடி-உதை: ஒருவர் கைது
திருவள்ளூர் அருகே தொழிலாளியை அடித்து உதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரை அடுத்த மொன்னவேடு எறையூர் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 66). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த துரை- ரமணி தம்பதியினர் குடும்ப செலவுக்காகவும், மருத்துவ செலவுக்காகவும் ரூ. 20 ஆயிரத்தை வாங்கி சென்றனர். இதை அறிந்த இவர்களின் மகனான கரும்பையன் (30) என்பவர் மது போதையில் பஞ்சாட்சரம் வீட்டுக்கு சென்று ஏன் என் பெற்றோருக்கு பணம் கொடுத்தாய் என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி சட்டையை பிடித்து இழுத்து அடித்து உதைத்துள்ளார். மேலும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார்.
இது குறித்து பஞ்சாட்சரம் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து கரும்பையனை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story