மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

அம்பை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 51 வயது உடைய தொழிலாளி ஒருவர் தனது 2 மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


Next Story