விஷம் குடித்த தொழிலாளி சாவு


விஷம் குடித்த தொழிலாளி சாவு
x

பேரளம் அருகே விஷம் குடித்த தொழிலாளி சாவு

திருவாரூர்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள கற்கத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 55). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல சம்பவத்தன்றும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story