கார் மோதி பெண் சாவு


கார் மோதி பெண் சாவு
x

கார் மோதி பெண் இறந்தார்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கபடுத்தான்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி சரோஜா (வயது55). இவர், நேற்று முன்தினம் மாலை செங்கபடுத்தான்காடு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரோஜா மீது மோதியது. இதில் சரோஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரோஜா மகன் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story