கல்லூரி வளாக கிணற்றில் தவறி விழுந்த சலவை தொழிலாளி சாவு


கல்லூரி வளாக கிணற்றில் தவறி விழுந்த சலவை தொழிலாளி சாவு
x

கல்லூரி வளாக கிணற்றில் தவறி விழுந்த சலவை தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 45). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சலவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் ராஜா நேற்று தவறி விழுந்து உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, ராஜாவின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ராஜாவின் மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story