பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்


பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
x

பணிநீக்கம் செய்யப் பட்ட மக்கள் நல பணியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

பணிநீக்கம் செய்யப் பட்ட மக்கள் நல பணியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிந்து கடந்த 8.11.2011 அன்று பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

எனவே, 8.11.2011 அன்று பணியிழந்த மக்கள் நலப் பணியா ளர்களில், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே பணிநீக்கம் செய்யபட்ட மக்கள் நலப்பணியாளர்கள் ்வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டும்.

விண்ணப்பம்

தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன், தற்போது வழங்கப்பட உள்ள பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)யிடம் வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.

இந்த பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்ட நிதியில் இருந்து ரூ.5,000-மும், கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2,500-மும் ஆக மொத்தம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 ஒட்டு மொத்த தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story