சங்கராபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய சாராயம், வெல்லம் பறிமுதல் தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு


சங்கராபுரம் அருகே  சரக்கு வாகனத்தில் கடத்திய சாராயம், வெல்லம் பறிமுதல்  தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு
x

சங்கராபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய சாராயம், வெல்லத்தை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் மூலக்காடு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினர்.

அதற்குள் சரக்கு வாகனத்தில் வந்த 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். தொடர்ந்து சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது அதில், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் 3 ஆயிரம் கிலோ, 120 லிட்டர் சாராயம் ஆகியன கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வெல்லம், சாராயம் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த தீர்த்தன் மகன் கார்த்தி, மூலக்காடு பகுதியை சேர்ந்த குமார் மகன் ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story