வேடசந்தூர் அருகே மரத்தில் மோதி விபத்தில் சிக்கிய லாரி


வேடசந்தூர் அருகே மரத்தில் மோதி விபத்தில் சிக்கிய லாரி
x

வேடசந்தூர் அருகே மரத்தில் லாரி மோதி விபத்தில் சிக்கியது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). லாரி டிரைவர். இன்று இவர், லாரியில் மாட்டு தீவனம் ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் ஆத்துமேடு என்னுமிடத்தில் லாரி வந்தது.

அப்போது முன்னால் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு வாகனம் திடீரென நின்றது. இதனை கவனிக்காத சதீஷ், சரக்கு வாகனம் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் லாரி திரும்பியபோது, சரக்கு வாகனத்தின் மீது உரசி சென்றது. இதுமட்டுமின்றி மரத்தின் அருகில் இருந்த மீன் கடையும் சேதமடைந்தது. இருப்பினும் லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story