சத்திரப்பட்டி அருகே தடுப்புச்சுவரில் மோதிய லாரி


சத்திரப்பட்டி அருகே தடுப்புச்சுவரில் மோதிய லாரி
x

சத்திரப்பட்டி அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்தில் சிக்கியது.

திண்டுக்கல்

கேரளாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று இரவு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே பெரியபாலம் பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் அந்த லாரி வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில், லாரியின் முன்பக்க சக்கரத்தின் அச்சு உடைந்து, தடுப்புச்சுவரின் மீது ஏறியபடி லாரி நின்றது.

விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக எந்தவொரு வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரி டிரைவர் லேசான காய்த்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து நடந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் லாரி டிரைவர், தூக்க கலக்கத்தில் அங்கிருந்த எச்சரிக்கை பலகையை கவனிக்காமல் வேகமாக சென்றது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story