லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுப்பேட்டை சப் -இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது புதுப்பேட்டை நெருஞ்சிப்பேட்டை பகுதியில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட லோகநாதன் மகன் சோமசுந்தரம் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story