மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் அருகே சரவணபுரத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், பகவதி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இந்தநிலையில் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.இதையடுத்து நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மகா மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story