மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் அருகே மாகாளியேந்தல் கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடைெபற்றது. தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் புனிதநீர் கலசங்களில் நிரப்பி வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு வந்து கோவிலை வலம் வந்தனர். இதைதொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மாகாளியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மாகாளியேந்தல் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story