உப்பனாற்றில் ஆண் பிணம்


உப்பனாற்றில் ஆண் பிணம்
x

கடலூர் முதுநகர் அருகே உப்பனாற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள ஈச்சங்காடு உப்பனாற்றில் 50 வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆற்றில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story