மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சந்தைப்பேட்டை பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தநாடு சந்தைப்பேட்டை அருகே மதுபாட்டில் விற்பனை செய்த புதூர் பகுதியை சேர்ந்த வைரசாமி (வயது56) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 125 மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story