மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் தழுதாழையில் இருந்து கள்ளப்பட்டிக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தழுதாழை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story