அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்


அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
x

திருக்கோவிலூர் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அங்கவை, சங்கவை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியை ஜெயஶ்ரீ தலைமை தாங்கி மேலாண்மை குழுவின் கடமைகள், பொறுப்புகள், பங்களிப்பு பற்றி விளக்கி பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் காயத்ரி வரவேற்றார். நகராட்சி கவுன்சிலர் அர்ச்சனா, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியாளர் ஜானகிராமன், பெற்றோர்-ஆசிரியர் கழக பிரதிநிதிகள் கார்த்திகேயன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவருக்கும் பள்ளி மேலாண்மை குழுவுக்கான வழிகாட்டி நெறிகள் பற்றிய கையேடு மற்றும் அன்பு என்ற புத்தகமும் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் பிரதிநிதி கோமதி நன்றி கூறினார்.


Next Story