மோட்டார் சைக்கிள்-மொபட் நேருக்கு நேர் மோதல்; சிறுவன் சாவு


மோட்டார் சைக்கிள்-மொபட் நேருக்கு நேர் மோதல்; சிறுவன் சாவு
x

மோட்டார் சைக்கிளும்,மொபட்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40), இவரது மகன் சிவராமன் (16). நேற்று முன்தினம் இரவு இவன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் நித்திஷ் (17), சண்முகம் மகன் சூர்யா (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வடசிறுவள்ளூரில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தான். மோட்டார் சைக்கிளை சிவராமன் ஓட்டினான். கலைநல்லூர் அருகே சென்றபோது எதிரே முகப்பு விளக்கு எரியாமல் வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சிவராமன், நித்திஷ், சூர்யா மற்றும் மொபட்டில் வந்த கலைநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பிரவீன்குமார் (21), ராஜமாணிக்கம் மகன் ராஜதுரை (26) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக சிவராமன் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக மொபட்டை ஓட்டிவந்த பிரவீன்குமார் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story