பெருந்துறை அருகேவடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை


பெருந்துறை அருகேவடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை
x

பெருந்துறை அருகே குடும்ப தகராறில் வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே குடும்ப தகராறில் வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

மேற்கு வங்காள மாநிலம் பரோமன் மாவட்டம் திக்நகரைச் சேர்ந்தவர் பிரசன்ஜித் பாரி (வயது 35). அவருடைய மனைவி அர்ச்சனா பாரி (32). இவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள லட்சுமண கவுண்டன் புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் 6 மாதங்களாக கூலி வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பிரசன்ஜித் பாரிக்கும், அர்ச்சனா பாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

தற்கொலை

அதன்பின்னர் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசன்ஜித் பாரி மனைவியிடம் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

மனமுடைந்த அர்ச்சனா பாரி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சனா பாரி நேற்று இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story