திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருக்கோவிலூர் அருகே  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள விலந்தை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் சரண்யா(வயது 19). சம்பவத்தன்று இவர் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்தார். இதை அவருடைய தாய் சரோஜா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story