புதுமாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை


புதுமாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை
x

புதுமாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

குன்னம்:

விஷம் தின்றார்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் முத்தரசன்(வயது 29). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.இந்நிலையில் கடந்த 21-ந் தேதி எலிக்கு வைக்கப்படும் பசையை(விஷம்) மதுவில் கலந்து முத்தரசன் குடித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் சேர்க்கப்பட்டார்.

சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அழகப்பன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து முத்தரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story