நியமனக்குழு, வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வு


நியமனக்குழு, வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வு
x

அரியலூர் நகராட்சியில் நியமனக்குழு, வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் நகராட்சி நியமனக்குழு, ஒப்பந்தக்குழு, வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நகர மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலர் ரகு தேர்தல் நடத்தும் அலுவலராக அறிவிக்கப்பட்டு கூட்ட அரங்கில் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா தேர்தல் ஏற்பாடுகளை செய்தார். கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சாந்தி மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேர் வந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும், சுயேச்சை கவுன்சிலர் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை.

நியமனக்குழுவிற்கு 1-வது வார்டு கவுன்சிலர் ஜேசுமேரியும், ஒப்பந்தக்குழுவிற்கு 14-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தியும், வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களுக்கு 6-வது வார்டு கவுன்சிலர் ரேவதி, 15-வது வார்டு கவுன்சிலர் ராணி, 4-வார்டு கவுன்சிலர் கண்ணன், 18-வது வார்டு கவுன்சிலர் புகழேந்தி ஆகிய 4 பேர் என மொத்தம் 6 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ரகு அறிவித்தார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நகராட்சி தலைவர் சாந்தி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story