மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி


மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி
x

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நத்தக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன். இவரது மனைவி முத்துகண்ணு(வயது 70). இவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் வெகு நேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் முத்துகண்ணுவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு அருகே உள்ள தேனூரில் உள்ள ஒருவரின் வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்களை சுற்றி வன விலங்குகளுக்காக போடப்பட்டுள்ள மின் வேலியில் முத்துகண்ணு சிக்கி இடது கணுக்காலில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துகண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story