வாகனம் மோதி மூதாட்டி பலி


வாகனம் மோதி மூதாட்டி பலி
x

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூரை அடுத்த நொச்சியம் அருகே உள்ள கூடபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியாயி (வயது 95). இவர் நேற்று முன்தினம் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் வாகனம் மாரியாயி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story