தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகில் உள்ள நம்புரான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேந்திரன் தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் மனைவி பழனியாயி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story