மொபட் மீது கார் மோதி முதியவர் சாவு


மொபட் மீது கார் மோதி முதியவர் சாவு
x

மொபட் மீது கார் மோதி முதியவர் சாவு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

ேவதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு(வயது65). சம்பவத்தன்று இவர் மொபட்டில் வேதாரண்யத்திற்கு சென்றுவிட்டு ஆயக்காரன்புலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அண்டர்காடு சோதனை சாவடி அருகே, பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் வைரக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வைரக்கண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.


Related Tags :
Next Story