கார் மோதி மூதாட்டி பலி


கார் மோதி மூதாட்டி பலி
x

கார் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள்(வயது 68). இவர் நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வல்லாபுரம் வானவில் நகரில் நடந்து சென்றபோது சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்த கார் அழகம்மாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அழகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவரான சென்னை, மேட்டு குப்பம், காமராஜர் நகரை சேர்ந்த ஜெயமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story