அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு


அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு
x

அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.

கரூர்

க.பரமத்தியில் புதிதாக தொடங்கப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து க.பரமத்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனன் தலைமை தாங்கி புதிய போலீஸ் நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டு, வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். க.பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். க.பரமத்தி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story