ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் வாசுகிஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சாந்தி முன்னிலை வகித்தனர். ஆணையாளர் அருணாசலம் வரவேற்றார். உதவியாளர் வடிவேல் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர், அனுராதாசுகுமார், குப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன் வெண்ணிலாசங்கர் ஆகியோர், பள்ளி கட்டிடங்கள் பராமரிப்பு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதை சீரமைக்கவேண்டும்.

சாலைகளில் செடி, கொடிகள், முட்செடிகளால ்சூழ்ந்துள்ளதை அகற்றுவதற்கு 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை ஈடுபட செய்ய வேண்டும்.

மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா, வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ராமமூர்த்தி, மருத்துவ அலுவலர் சரவணன், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி நன்றி கூறினார்.


Next Story