பீடி, சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம்


பீடி, சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம்
x

பீடி, சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பல்வேறு கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராஜ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், போலீசார் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினார். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவை உள்ளதா? என்பது குறித்து அவர்கள் ஒவ்வொரு கடையாக துருவித் துருவி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் 4 கடைகளில் பீடி, சிகரெட்களை சில்லறையில் விற்பனை செய்ததாக அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.


Next Story