பிரதமர் மோடியை வரவேற்று கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் டுவீட்


பிரதமர் மோடியை வரவேற்று கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் டுவீட்
x

கோப்புக்காட்சி

பிரதமர் மோடி சென்னை வருகையொட்டி அவரை வரவேற்று கவர்னர் ஆர்.என்.ரவி டுவீட் செய்துள்ளார்.


சென்னை,

மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வியாழக்கிழமை) பிரமாண்ட விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி டுவிட்டர் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர் என தமிழில் பதிவிட்டுள்ளார்.


Next Story