மீன்சுருட்டி பகுதியில் மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி


மீன்சுருட்டி பகுதியில் மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
x

மீன்சுருட்டி பகுதியில் மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் தற்போது பருவக்காற்று பலமாக வீசிவருவதால் தைல மரங்கள் மற்றும் சவுக்கு மரங்கள் மின்கம்பங்களில் விழுந்து அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக காலை 10 மணியளவில் துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு 8 மணிக்கு மேல் தான் வருகிறது. இதனால் தொழில் துறையினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தங்கு தடையின்றி மின்வினியோகம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story