மக்கள் ராஜ்யம் கட்சியினர் சாலை மறியல்
சங்கராபுரத்தில் மக்கள் ராஜ்யம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகே மக்கள் ராஜ்யம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு கட்சி தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார்.மல்லாபுரம் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள போயர் ஒட்டர் இன மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், போயர் ஒட்டர் இன மக்களுக்கு சீர்மரபினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story