பெரியகுளம் பகுதியில் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


பெரியகுளம் பகுதியில்  கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 5 Nov 2022 6:45 PM GMT (Updated: 5 Nov 2022 6:45 PM GMT)

பெரியகுளம் பகுதியில் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது

தேனி

சனி பிரதோஷத்தையொட்டி, பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திகேஷ்வரர், கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனையொட்டி சிவன், நந்தீஸ்வரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திருமஞ்சனப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பெரியகுளம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Related Tags :
Next Story