பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கால்நாட்டு நிகழ்ச்சி


பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கால்நாட்டு நிகழ்ச்சி
x

கடையம் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் வடக்கு பஜாரில் உள்ள உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினார்கள். கால் நாட்டு நிகழ்ச்சியில் புளி கணேசன், ராமசாமி, வேல்முருகன், கணேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கீழக்கடையம் ஊர் பொதுமக்கள், 18 பட்டி ஊர் மக்கள், உடையார் சாம்பியன்ஸ் கிளப் நண்பர்கள் செய்து வருகிறார்கள்.



Next Story