இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில் கடலோர தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த ஆம்னி வேனில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும், இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.


Next Story