பெரிய மணலி வீரமாத்தி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை


பெரிய மணலி  வீரமாத்தி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
x

பெரிய மணலி வீரமாத்தி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே பெரிய மணலி குஞ்சாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலில் 2-வது ஆண்டாக 1,008 திருவிளக்கு, மாங்கல்ய பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு திரவியங்கால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சமயபுரத்து மாரியம்மன் அலங்காரத்தில் வீரமாத்தி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஆந்தைகுல பங்காளிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்களுக்கு விரலி மஞ்சள், தாலி சரடு, வளையல், எலுமிச்சை பழம், குங்குமம், லட்டு, வெற்றிலை பாக்கு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா பழனிச்சாமி, சிங்களாந்தபுரம் சுரேஷ் மற்றும் பெருமாள் சுவாமி கோவில்கள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் இளமதி, செயலாளர் பூபதி, பொருளாளர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story