கன்னிவாடி, தாளையூத்து பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


கன்னிவாடி, தாளையூத்து பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

கன்னிவாடி, தாளையூத்து பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

கன்னிவாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னிவாடி, பண்ணைப்பட்டி, சுரக்காய்பட்டி, தருமத்துப்பட்டி, சர்க்கரை கவுண்டன் சாலை, வெள்ளைமரத்துபட்டி, கீழதிப்பம்பட்டி, மேலதிப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, கோனிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பழனி அருகே தாளையூத்து, வாகரை துணை மின்நிலையங்களில் உள்ள தாளையூத்து, அப்பனூத்து பீடரில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தாளையூத்து, தாதநாயக்கன்பட்டி, சித்திரைகுளம், சின்னக்கலையம்புத்தூர், சுக்கமநாயக்கன்பட்டி, சப்பளநாயக்கன்பட்டி, நாகூர், திருவாண்டபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.


Next Story