திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் 27-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்


திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் 27-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
x

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 27-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 27-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அசோக்நகர், பிள்ளையார் பாளையம், பாண்டியன் நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, பஸ் நிலையம், போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சர் காம்பவுண்டு, ஆரோக்கியமாதா தெரு, மென்டோன்சான் காலனி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கிழக்கு மரியநாதபுரம், சவுந்தரராஜா நகர், தேவசகாய நகர், தொழிற்பேட்டை, மேற்கு மரியநாதபுரம், அனுமந்த நகர் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திக் தெரிவித்தார்.

திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தம் துணை மின்நிலையத்தின் மின்பாதைகளில் 27-ந்தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல், சின்னாளப்பட்டி மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story