ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை மின் நிறுத்தம்


ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை மின் நிறுத்தம்
x

ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, வடவீக்கம், குருவாலப்பர்கோயில், விழப்பள்ளம், பிச்சனூர், வாரியங்காவல், தேவனுர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம் (வடக்கு), ஆயுதகளம் (தெற்கு), தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story